கேள்விகள் , சந்தேகங்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி .
1.
நான்
மார்கெட்டிங் தொழிலில் வேலை செய்து வருகிறேன். வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள்
செல்லும்போது.பல்வேறு
உணவகங்களில் சாப்பிடுவதால் வயிறு பிரச்சனை நீண்ட நாட்களாக உள்ளது . மேலும் தண்ணீர்
ஒத்துக்கொள்வதில்லை . எப்போதும் மினரல்வாட்டர் மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.என்
பிரச்சனைக்கு மலர்மருத்துவத்தில் தீர்வு உள்ளதா ?
-
சுந்தர்
, சென்னை.
நிச்சயம் மலர்மருத்துவதின்
மூலம் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு உள்ளது சுந்தர். கவலை வேண்டாம்.
வால்நட் மற்றும்
கிராப் ஆப்பிள் என்கிற இரண்டு மலர்மருந்துகளை தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட உங்கள்
பிரச்சனை முற்றிலும் விலகும்.
2.
நான்
குடும்ப தலைவி , என் கணவர் நான் என்ன சமைத்தாலும் , என்ன வேலை செய்தாலும் ஏதாவது வேண்டுமென்றெ குறைகூறிக்கொண்டே உள்ளார் . அதனால் எனக்கு எப்போதும்
கவலையாகவும் ஒரே பதட்டமாகவும் உள்ளது . என்ன செய்வது ?
- ரம்யா
. மங்களூர்.
உங்கள்
பிரச்சனை புரிகிறது ரம்யா .
இப்பிரச்சனை
தீர உங்களுக்கு மட்டுமில்லாமல் ,உங்கள் கணவருக்கும் மருத்துவம் தேவை . நன்கு விசாரணைக்கு
பின்பே முற்றிலும் உங்கள் இருவருக்கும் இடையிலுள்ள பிரச்சனை தீர வழிவகை செய்யப்படும்.
இருப்பினும் தற்போதைய நிவாரண மருந்தாக ,
வில்லோ
, ஹாலி என்கிற இரண்டு மருந்துகள் உங்கள் கணவருக்கு .
ஜென்சியன்
, மற்றும் R.R. மருந்துகள் உங்களுக்கு .
3
மாதங்கள் மருந்தைப்பயன் படுத்தவும் .
3.
அதிக
முரண்டு பிடித்து எப்போதும் என் குழந்தைகள் அழுதுகொண்டே உள்ளது ? – குமார் – தஞ்சாவூர்.
4.
நீச்சல்
கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை . ஆனால் தண்ணீரைக் கண்டாலே பயம் எனக்கு. மலர் மருந்து
உதவுமா டாக்டர் சார் ? -
கிரிஸ்டோபர்
– பெங்களூர்
உங்கள்
பயம் போக மிமுலஸ் மலர் மருந்தை பயன் படுத்தி வாருங்கள்.
5.
எனக்கு
வயது 48 , தனியார் நிறுவனத்தில் கிளார்க் வேலை செய்து வருகிறேன். கடந்த 6 மாதங்களாகவே
தூக்கத்தில் அதிக கனவுகள் வருகின்றன. தூக்கத்தின் இடையில் விழித்துவிட்டால் மீண்டும்
தூங்க முடிவதில்லை ? தூக்க மாத்திரை சாப்பிட விருப்பமில்லை . என் பிரச்சனை தீர வழி
சொல்லுங்கள் சார் .
- செல்வகணபதி
– சேலம்
ஆஸ்பென் மருந்தை
இரவில் எடுத்துக்கொள்ளுங்கள் . தூக்கத்திலிருந்து இடையில் விழித்து விட்டால் ரெஸ்கியூ
ரெமடி சாப்பிடவும். உங்கள் தூக்க பிரச்சனை சரியாகிவிடும்.