Monday, April 8, 2013

எளிது இனிது மனநலம்

நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சனைகள் எத்தனையோ.
அதிலும் அனைத்து செல்வங்கள் இருந்தும் உடல் நிலை சரியில்லை எனில் துயரம் தான் மிச்சம்.
பெரும்பாலான உடல் சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு அருகிலோ அல்லது வெளி ஊரிலோ உள்ள மருத்துவ வசதிகளை பயன் படுத்தி  வைத்தியம் செய்து கொள்கிறோம்.சாதாரண படிக்காத மக்களாகட்டும் , படித்தவர்களாகட்டும் உடல் நலம் குறித்த ஆவல் , அக்கறை , ஆரோக்கியம் இருந்த அளவிற்கு இன்னும் மனநலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சரியானதொரு புரிதல் , விழிப்புணர்வு இல்லை என்பது தான் உண்மை.
ஒருவருக்கு மனநலம் சரியில்லை , மனதளவில் ஏதோ பிரச்சனை எனில் அவர் மெண்டல்(Mental)- அதாவது  பைத்தியம்,பைத்தியகாரத்தனம் என்று பொதுவாக மக்கள் அனைவரும் நினைத்து கொள்கிறார்கள். பேதலித்த மனநிலையின் தீவிர நிலை தான் பைத்தியம் என்பதை புரிந்து கொள்ள தவறுகின்றனர்,அதனாலே என்னவோ மனநல பிரச்சனை என்றாலே அதை மிகவும் ரகசியமாகவும் , பிறரிடம் சொல்லாமலும் மறைத்து விடுகின்றனர்.சாதாரணப் மனநல பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு காணாமல் பல மாதங்கள், வருடங்கள் கழித்து வருத்தப்படுகின்றனர்.
உதாரணமாக : பயம் , பதட்டம் ,கோபம்,கூச்சம், கவலை , துக்கம் ,
 தாழ்வு மனப்பான்மை,தன்னம்பிக்கையின்மை,விரக்தி ,தூக்கமின்மை,
சந்தேகம், பொறாமை,மன அழுத்தம்,கெட்ட பழக்கங்கள்,தாம்பத்திய பிரச்சனைகள் இன்னும் பல...

நம் அன்றாட வாழ்வில்  அனைவரும் சந்திக்கின்ற மனநல பிரச்சனைகள் குறித்தும் , அது எதனால் ஏற்படுகிறது , அப்பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது , ஆலோசனை மற்றும் இயற்கை முறை மாற்றுமருத்துவங்களின் மூலம் பக்கவிளைவில்லாமல் எளிதாக அதே நேரத்தில் பூரண நலம் பெருதல் எவ்வாறு என்பதை அறிந்து கொள்வவோம்.