Monday, April 8, 2013

எளிது இனிது மனநலம் - திருமணம்


உலகில் எத்தனையோ பிரச்சனைகள் அனைதிற்கும் பல்வேறு காரணங்கள் , தீர்வுகள் . ஆனால் நம் நாட்டை  பொறுத்தமட்டில ஒரு பெண்ணோ? ஆணோ ? பருவ வயது அடைந்துவிட்டால் அவர்களுடைய பெற்றோர் அனைவருக்கும் இருக்க கூடிய மிகப்பெரிய சவால் – திருமணம்.
காதல் – காமம் இரண்டையும் தாண்டி இருமனங்கள் இணையக்கூடிய
புனிதமான நிகழ்வு – திருமணம் , ஆனால் அது நடைபெறுவதில் தான் எத்தனை எத்தனை சிக்கல்கள் . ஜோதிடம் , பொருத்தம் , மதம் , கல்வி, வேலை , பணம் , அந்தஸ்து இன்னும் பல.

இவை அனைத்திலும்  திருமணத்திற்கு தடையாக இருக்க கூடிய
அடிப்படை காரணம் என்னவென்றால் “ எதிர்பார்த்தல் “ அதன் தொடர்ச்சியாக “ ஏமாற்றம் “ இந்த இரண்டு எதிர்மறை மனநிலை தான்.

பொதுவாக ஒரு பெண்ணோ அல்லது ஆணோ  வயது அடிப்படையில் அவர்கள் திருமணத்திற்கு தகுதியாக இருப்பதைப் போல மனதளவில் தாங்கள் திருமணத்திற்கு தயாராகுகிறார்களா ? என்றால் பெரும்பான்மையாக இல்லை என்பது தான் உண்மை.

” எனக்கு மேற்படிப்பு படிக்க ஆசை , ஆனால் எங்கள் வீட்டில இப்போதே திருமணசெய் என்கிறார்கள் ? எனக்கு பிடிக்கல ஆனாலும் மறுக்கமுடியாததால சரினு சொன்னேன் “ என்கிறாள் ஒரு பெண்.
வேலைக்கு போயாச்சு , இன்னும் வெளிநாடு போயி நல்லா ஜாலியாக

ரெண்டு வருசம் இருந்துவிட்டு அப்புறம் மேரெஜ் பண்ணலாம்னா வீட்டுல யார் கேட்கிறா , பாட்டி செத்துப்போகும்னு சொல்லி திருமணத்திற்கு அவசரபடுத்துகிறார்கள் ”– விரக்தியுடன் ஒரு ஆண்.

தங்களுடைய திருமணத்திற்கு தயாராகாத மனநிலையில் இவர்கள் இருவரும் வாழ்வில் எப்படி இணைய முடியும்?!

திருமண நடைபெற…

ஆணும் பெண்ணும் ஓர் நேர்மறை எண்ணத்தில் மனதளவில் இருக்க வேண்டும்.

வேண்டாத எண்ணங்கள் ,

அதிருப்தி

வெறுப்புணர்ச்சி

சகமனிதர்களை புரிந்துகொள்ளாமை

போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கி நன்னம்பிக்கை உருவாக லார்ச் , வில்லோ  மற்றும் ஹாலி மலர் மருந்துகள் பயன்படும்.

திருமணம் புரிய உள்ள ஆண்/பெண் எதிர்பார்ப்புகள் மற்றும் இருவீட்டு பெற்றோர்கள் மனநிலை

ஓர் எல்லைக்குட்பட்டு இல்லாமல்

நிஜத்திற்கு சாத்தியமாகாமல்

பெரும் கற்பனைகளிலும் ,

அலட்சியத்திலும்

பழைய பழக்கவழக்கங்களிலும் ,

விரும்பதகாத விவாதங்களில்

கவலைகளில்

இருக்கின்ற பட்சத்தில் மனக்குறிகளுக்கு ஏற்ப கார்ஸ் ,லார்ச் ,ஜென்சியன், மஸ்டார்டு, கிளெமேடிஸ்,வால்நட்,அக்ரிமோனி,கிராப ஆப்பிள்,சிக்கரி,மிமுலஸ் ஆகிய மலர்மருந்துகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி பாசிடிவ் மனநிலை பெற்று ஓரிரு மாதங்களில் திருமணம் சுபமாக நடைபெற்று  சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்.