அழகிய உடல் எப்போதும்
ஒரு கவர்ச்சியையும் நல்ல தோற்றப்பொலிவையும் தரும். உலகமெங்கும் வயது வித்தியாசமின்றி
ஒரு சிறந்த கட்டுடலுக்காக ஜிம்,ஏரோபிக்ஸ்,யோகா மற்றும் பல உடற்பயிற்சிகளிலும் மக்கள்
ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சிலர் மட்டுமே ஸ்டெயில்லான கவர்ச்சியான அதேசமயத்தில்
ஆரோக்கியமான உடல் அமைப்பை பெறுகின்றனர். உடல் பருமனாக இல்லாமல் இருப்பதற்கு அவர்கள் உட்கொள்ளக்கூடிய
உணவு பழக்க வழக்கங்களில் வேறுபாடு இருப்பினும் உணவு விசயங்களில் உணர்ச்சிகளுக்கு இடம்
கொடுக்காத மனநிலையே முக்கிய உளவியல் காரணமாக அமைகிறது.
தனது உடலின் தேவைக்கு
ஏற்ப உண்ணாமல் அதிஉணர்ச்சியால் உண்பவர்களே உடல் பருமனுக்கு உள்ளாகுகின்றனர்.
உணவு உண்ணும் முறையில்
அவர்களிடம் காணப்படுகின்ற எதிர்மறை குணங்களே இதற்கு அடிப்படை .
1.
கட்டுபடுத்த
இயலாத ஆசை குறிப்பிட்ட உணவின் மீது
2.
அதிக
களைப்பு
3.
மன
அழுத்தம்
4.
மன
சோர்வு
5.
தனிமை
6.
நீண்ட
நாள் பழக்கம்
7.
தவறுகளை
மீண்டும் செய்தல்
மேற்கண்ட காரணங்களால்
மனதை கட்டுபடுத்த முடியாமல் மேலும் மேலும் ஆசைக்கு இடமளித்து அதிகமாகவும் அடிக்கடியும்
உண்டு பருத்த உடலமைப்பை பெருகின்றனர். எனவே தான் எத்தனை உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்தும்
பலனின்றி துயரத்திற்கு உள்ளாகுகின்றனர்.
தனது உடல் பருமனாக
உள்ளதை அசிங்கமாக கருதி பொது இடங்களுக்கும், வீட்டில் விசேச நிகழ்வுகளுக்கும் செல்வதை
தவிர்க்கும் மனநிலையில் கூட உள்ளனர். இன்னும்
சிலர் தங்களுக்கு பிடித்தமான உடைகளை அணிய இயலாத நிலையில் கவலையும் துயரமும் கொள்கின்றனர்
இத்தகைய பிரச்சனைகளில்
உள்ளோர் உணவின் மீது உள்ள நாட்டத்தை கட்டுப்படுத்தவும் , அசிங்கமாக தெரிகிறோம் என்ற
மனநிலையை மாற்றவும் மீண்டும் உணவு ஆசையில் தவறுகள் செய்யாமல் இருக்கவும் மலர் மருந்துகளில்
வால்நட்,செர்ரிப்ளம், செஸ்நட்பட்,கிராப் ஆப்பிள், லார்ச்,ஜென்சியன் முதலியவற்றை அவரவர்
மனக்குறிக்ளுக்கேட்ப உட்கொண்டு உடல் பருனுக்கு விடை கொடுத்து கட்டான அழகிய உடல் பெற்று
ஆரோக்கியமுடன் வளமாக வாழ வாழ்த்துக்கள்.