மணத்தக்காளி கீரை
அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.
வாழைத்தண்டு சாறு,பூசணி
சாறு,அருகம்புல் சாறு இவைகள் எதை ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் சதை போடுவதைத்
தடுக்கலாம்.
தொடர் வயிற்றுப்
போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.
முருங்கைப்பூவை
பாலில் காய்ச்சி சாப்பிட மோகம் அதிகமாகும்.
மாதுளம்பழம் அடிக்கடி
சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி,எலும்பு உறுதி,பற்கள் உறுதிபடும்.
தேங்காய் பால்
அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.
பூண்டு,வெங்காயம்
அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.
நார்த்தங்காய்
ஊறுகாய் மலச்சிக்கலைப் போக்கி நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
வேப்பம் பூவுடன்
மிளகு,சீரகம் சேர்த்து உண்டுவர பித்தப்பை நோய் குணமாகும்.
அகத்திக்கீரை,மணத்தக்காளிக்கீரை
இரண்டையும் சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் தீரும்.
சப்போட்டா பழம்
தினமும் பகல் பொழுதில் உண்டு வர இரவில் நன்றாக தூக்கம் வரும்.