Monday, April 8, 2013

எளிது இனிது மனநலம் - வேலை


இன்று நம் ஒவ்வொரு வீட்டிலும் கவலையுடன் சொல்லக்கூடிய விசயம் என் பிள்ளை / கணவர் / சகோதரர் வேலைக்கு போவதில்லை சார். ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்தால் ரெண்டு அல்லது மூணு மாசம் தான் ஒழுங்காப் பாக்குறார். அப்புறம் இதுசரியில்ல அது சரியில்லனு சொல்லி வேலையை விட்டு நின்னுக்கிறார்.

சிலர் அடிக்கடி தொழிலை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் .
அவர்களிடம் கேட்டால் ஒன்னும் செட்டாகல , எப்ப பார்த்தாலும் நமக்குனு ஏதாவது ஒரு பிரச்சனை தொழில்ல வருது , நேரம் நமக்கு சரியில்லை என்கிறார்கள்.
படித்து முடித்த இளைஞனோ எங்க வேலை கிடைக்குது? நம்ம படிப்புக்கேத்த வேலையில்ல சார் என்று கூறிக்கொண்டு வேலைக்கு செல்லாமல் இருக்கிறார்கள்.

அவர்கள் கூறுகின்ற காரணங்கள் அவரவர் பார்வையில் சரியென இருந்தாலும் உண்மை என்னவோ சற்று மாறாக தான் இருக்கிறது. ஒரே கல்லூரியில் , ஒரே தெருவில் , அருகில் வசிக்கின்ற மற்றவர்கள் சில ஆண்டுகளுக்குப் பின் வாழ்க்கையில் செட்டில் ஆகும் போது தான் இவர்கள் யோசிக்க தொடங்குகின்றர் . எங்கே தோல்வி ஏற்பட்டது ? அதற்கு என்னவெல்லாம் காரணாம் ? என்று.

ஒரே தகுதி இருக்கும் பலரில் ஒரு சிலரே வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்வதும் , வீடு , கார்  என வசதியாக வாழ்வதற்கும் அடிப்படையில் என்ன காரணம் இருந்துவிடப்போகிறது, அவரிகளின் மனம் தான் அனைத்திற்கும் காரணம்.

நேர்மறை மனநிலை – பாசிடிவ் மைண்ட் உள்ள மனிதர்

·         தன்னை சுற்றிலும் உள்ள சூழல் , என்ன நடக்கிறது , தான் அதற்கேற்ப எவ்வாறு செயல்புரிய வேண்டும் என்பதில் மிகத்தெளிவாக உள்ளார்.

·         திட்டமிடுதல் ,

·         நேர மேலாண்மை,

·         செயல் படுத்தும் ஆற்றல்

·         தன்னம்பிக்கை

     ·         துணிச்சல்           ஆகிய சிறந்த பண்புகளுடன்  திகழ்கிறார்.

  • நம்மால முடியுமா ?
  • தோல்வி குறித்த சிந்தனை .
  • கவனமின்னை
  • எதிலும் அவசரம் ,
  • அக்கறையின்மை, அலட்சியம்
  • எதிலும் பயம் போன்ற தேவையற்ற எதிர்மறை எண்ணங்களே , சிந்தனைகளே அடிப்படையில் வாழ்வின் தோல்விக்கு காரணங்களாக அமைகின்றன.

1.   பயம் காரணமாக இண்டெர்வியூ செல்ல மறுப்பவர்கள்

2.   அடிக்கடி தொழிலை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள்

3.   தன்னம்பிக்கையின்மையால் தொழில் தொடங்காமல் அல்லது

ஈடுபடாமல் உள்ளோர்.

4.   எதிலும் சோம்பல் , பொறுப்பற்று சுற்றி திரிபவர்கள்.

5.   தொழிலில் கடந்தகால தோல்வி , அதன் பாதிப்பால் நிலைகுலைந்தோர்.

6.   காரியத்தில் எதிலும் ஈடுபடாமல், எப்போதும் கனவிலேயே இருப்பவர்

7.   கெட்ட பழக்கம் , மது போதை அடிமை தனம் காரணங்களால் தொழிலில் பாதிப்பு

மேலும் பல எதிர்மறை மனநிலைகளுக்கு ஒவ்வொருவருடைய மனக்குறிகளுக்கு ஏற்ப - மிமுலஸ், ஹனிசக்கிள் , கிளைமேட்டிஸ், ஒயில்ட்ரோஸ் , ஒயில்ட் ஓட் , லார்ச், வால்நட், ஜென்சியன், எல்ம் போன்ற மலர்மருந்துகளை பயன்படுத்தி மனநலம் பெறலாம்.

இயற்கை முறை மலர் மருந்துகளால் மேற்கண்ட பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெற்று தம் தகுதிக்கு ஏற்ப சிறப்பான பணிகளில் திறம்பட ஈடுபட்டு பணவளத்தை பலமடங்கு பெருக்கி பயன் அடைய வாழ்த்துகிறோம்