Monday, April 8, 2013

அவசர உதவி மருந்து R.R .

       
பரபரப்பான வாழ்க்கை சூழலில் உடலும் மனமும் அதிவேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம். இதனால் நாம் எதிர்பார்க்காமல் திடீரென விரும்பதாக நிகழ்வுகள் , விபத்துகளில் ஆட்படும் சூழல் உருவாகி விடுகிறது. அப்படிபட்ட சந்தர்ப்ப நிலைகள் நம்மை தாக்காமல் தற்காத்துக் கொள்ளவும் , விபத்துகளின் போதும் , அதன் பின்னரும் உடல் , மன அதிர்ச்சியிலிருந்து உடனே விடுபட்டு நலம் பெறவும் உதவக்கூடிய அற்புத மலர் மருந்து R.R என்றழைக்கப்படுகிற ரெஸ்கியு ரெமடி(Rescue Remedy).

வேண்டாத நிகழ்வுகளின் போது ஏற்படக்கூடிய எதிர்மறை மனநிலைகளான

1.   மயக்கம்

2.   அதிர்ச்சி

3.   கட்டுபாடு இழக்கும் நிலை

4.   சகிப்புதன்னையின்மை

5.   பீதி

முதலியவற்றிலிருந்து உடனடியாக நம்மை மீட்டு,மீண்டும் நம் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு சிறந்த நிவாரணி.

இம்மருந்து தேவைப்படும் சூழ்நிலைகள்

1.   எதிர்பாராத, அதிர்ச்சியூட்டும் செய்திகளால் மனபாதிப்பு

2.   தேர்வின் போது

3.   பிரசவ நேரத்தில்

4.   குழப்பமான எண்ணங்களினால் தூக்கமிழந்து தவிக்கும் போது

5.   திடீரென பயம் , பதட்டம் ஏற்படும் போது.

6.   எதிர்பாராத விதமாக முட்டிக்கொள்ளுதல்,மோதிக்கொள்ளுதல்,அடிபடும் நேரங்களில்

7.   பாம்பு ,பூரான்,தேள்,பூனை,எலி,நாய்,வண்டுகள் கடித்து விட்டால்

8.   நெருப்பு காயங்கள் ஏற்பட்டால்

9.   கால் கை வலிப்பு வருவதற்குரிய முன் அறிகுறி தெரியும் போது

10. நீச்சல் பழகும் போது , வாகனம் ஓட்டக்கற்கும் போது

11. அறுவை சிகிச்சை சூழலின் போது

மேலும் பல விதங்களில் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் ,தாவரங்களுக்கும் R.R.அற்புதமாக பயன் அளிக்கிறது.