Saturday, April 27, 2013

கேள்வி - பதில் 1


கேள்விகள் , சந்தேகங்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி .

1.   நான் மார்கெட்டிங் தொழிலில் வேலை செய்து வருகிறேன். வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்லும்போது.பல்வேறு உணவகங்களில் சாப்பிடுவதால் வயிறு பிரச்சனை நீண்ட நாட்களாக உள்ளது . மேலும் தண்ணீர் ஒத்துக்கொள்வதில்லை . எப்போதும் மினரல்வாட்டர் மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.என் பிரச்சனைக்கு மலர்மருத்துவத்தில் தீர்வு உள்ளதா ?

-    சுந்தர் , சென்னை.

நிச்சயம் மலர்மருத்துவதின் மூலம் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு உள்ளது சுந்தர். கவலை வேண்டாம்.

வால்நட் மற்றும் கிராப் ஆப்பிள் என்கிற இரண்டு மலர்மருந்துகளை தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட உங்கள் பிரச்சனை முற்றிலும் விலகும்.

2.   நான் குடும்ப தலைவி , என் கணவர் நான் என்ன சமைத்தாலும் , என்ன வேலை செய்தாலும் ஏதாவது வேண்டுமென்றெ  குறைகூறிக்கொண்டே உள்ளார் . அதனால் எனக்கு எப்போதும் கவலையாகவும் ஒரே பதட்டமாகவும் உள்ளது . என்ன செய்வது ?
                                                                                                         - ரம்யா . மங்களூர்.

உங்கள் பிரச்சனை புரிகிறது ரம்யா .  
இப்பிரச்சனை தீர உங்களுக்கு மட்டுமில்லாமல் ,உங்கள் கணவருக்கும் மருத்துவம் தேவை . நன்கு விசாரணைக்கு பின்பே முற்றிலும் உங்கள் இருவருக்கும் இடையிலுள்ள பிரச்சனை தீர வழிவகை செய்யப்படும்.

இருப்பினும் தற்போதைய நிவாரண மருந்தாக ,

வில்லோ , ஹாலி என்கிற இரண்டு மருந்துகள் உங்கள் கணவருக்கு .

ஜென்சியன் , மற்றும் R.R. மருந்துகள் உங்களுக்கு .

3 மாதங்கள் மருந்தைப்பயன் படுத்தவும் .

3.   அதிக முரண்டு பிடித்து எப்போதும் என் குழந்தைகள் அழுதுகொண்டே உள்ளது ?                    குமார் – தஞ்சாவூர்.

 
சிக்கரி மற்றும் செர்ரி ப்ளம் இவ்விரண்டு மருந்துகளையும் தினமும் 3 வேலை கொடுத்து வாருங்கள் .

 
4.   நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை . ஆனால் தண்ணீரைக் கண்டாலே பயம் எனக்கு. மலர் மருந்து உதவுமா டாக்டர் சார் ?               -     கிரிஸ்டோபர் – பெங்களூர்
 
 
      நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும் கிரிஸ்டோபர் .

உங்கள் பயம் போக மிமுலஸ் மலர் மருந்தை பயன் படுத்தி வாருங்கள்.

5.   எனக்கு வயது 48 , தனியார் நிறுவனத்தில் கிளார்க் வேலை செய்து வருகிறேன். கடந்த 6 மாதங்களாகவே தூக்கத்தில் அதிக கனவுகள் வருகின்றன. தூக்கத்தின் இடையில் விழித்துவிட்டால் மீண்டும் தூங்க முடிவதில்லை ? தூக்க மாத்திரை சாப்பிட விருப்பமில்லை . என் பிரச்சனை தீர வழி சொல்லுங்கள் சார் .             

                                                                  - செல்வகணபதி – சேலம்
               
ஆஸ்பென் மருந்தை இரவில் எடுத்துக்கொள்ளுங்கள் . தூக்கத்திலிருந்து இடையில் விழித்து விட்டால் ரெஸ்கியூ ரெமடி சாப்பிடவும். உங்கள் தூக்க பிரச்சனை சரியாகிவிடும்.