Monday, April 8, 2013

எளிது இனிது - மனநலம் - தேர்வில் வெற்றி

பள்ளி , கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவக்கூடிய மருந்துகள் இருக்கிறதா ? என்று என்னிடம் செல்போனிலும் , நேரிலும் பலர் கேட்கின்றனர். சரியாகவே படிக்கமாட்டேன்கிறான் ? அதிக மார்க் எடுக்கணும் அதுக்கு ஏதாவது மருந்து கொடுங்கள் என்பதே அவர்களின் முதன்மையான கேள்வி. அவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் , ரெடிமேடாக – அதிக மதிப்பெண் பெற மெமரி மாத்திரை என்று மலர் மருந்துகளில் எதுவும் இல்லை. ஒவ்வொரு மாணவ/மாணவியரின் தனித்தனியான எதிர்மறை குணங்களுக்கு ஏற்றால் போல் மருந்துகளை தேர்வு செய்து கொடுக்கும்பட்சத்தில் நிச்சயம் அவர்களிடமுள்ள குறைகள் நீங்கி படிப்பில் ஆர்வமும் , கவனமும் ஏற்பட்டு   சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற முடியும்.

பெரும்பான்மை மாணவர்களிடம் காணப்படுகின்ற குறைகள் ,எதிர்மறை குணங்கள் , மனநிலைகள் என்னவென்றால் ,

·         சோம்பல்

·         தன்னம்பிக்கை இன்மை

·         எத்தனை படித்தாலும் மனதில் பதியாமல் போதல்

·         நாளை படிக்கலாம் அல்லது பிறகு படிக்கலாம் என்ற தள்ளிப்போடும் சுபாவம்

·         கவனமின்மை – அலைபாயும் மனநிலை

·         எப்போதும் தூக்க கலக்கம்

·         தேர்வு பயம்,பதட்டம்

·         ஞாபகமறதி

·         செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்தல்
     
             மேலும் வேறு பல காரணங்கள்.

இத்தகைய குறைகள் நீங்கிட மலர் மருந்துகளான ஸ்கிலெராந்தஸ், செஸ்நட்பட், மிமுலஸ், லார்ச், கிளெமேடிஸ் , எல்ம் , சிறப்பாக பயன்படுகின்றன.

அவரவர் குறைகளுக்கு ஏற்ப மருந்து தேர்வுசெய்து பயன்படுத்தி நல்மதிப்பண் பெற்றிட வாழ்த்துக்கள்.