பள்ளி , கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு
உதவக்கூடிய மருந்துகள் இருக்கிறதா ? என்று என்னிடம் செல்போனிலும் , நேரிலும் பலர் கேட்கின்றனர்.
சரியாகவே படிக்கமாட்டேன்கிறான் ? அதிக மார்க் எடுக்கணும் அதுக்கு ஏதாவது மருந்து கொடுங்கள்
என்பதே அவர்களின் முதன்மையான கேள்வி. அவர்களுக்கு மட்டுமின்றி
அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் , ரெடிமேடாக – அதிக மதிப்பெண்
பெற மெமரி மாத்திரை என்று மலர் மருந்துகளில் எதுவும் இல்லை. ஒவ்வொரு மாணவ/மாணவியரின்
தனித்தனியான எதிர்மறை குணங்களுக்கு ஏற்றால் போல் மருந்துகளை தேர்வு செய்து கொடுக்கும்பட்சத்தில்
நிச்சயம் அவர்களிடமுள்ள குறைகள் நீங்கி படிப்பில் ஆர்வமும் , கவனமும் ஏற்பட்டு சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற
முடியும்.
மேலும் வேறு பல காரணங்கள்.
பெரும்பான்மை மாணவர்களிடம் காணப்படுகின்ற
குறைகள் ,எதிர்மறை குணங்கள் , மனநிலைகள் என்னவென்றால் ,
·
சோம்பல்
·
தன்னம்பிக்கை இன்மை
·
எத்தனை படித்தாலும் மனதில் பதியாமல் போதல்
·
நாளை படிக்கலாம் அல்லது பிறகு படிக்கலாம்
என்ற தள்ளிப்போடும் சுபாவம்
·
கவனமின்மை – அலைபாயும் மனநிலை
·
எப்போதும் தூக்க கலக்கம்
·
தேர்வு பயம்,பதட்டம்
·
ஞாபகமறதி
·
செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்தல்
மேலும் வேறு பல காரணங்கள்.
இத்தகைய குறைகள் நீங்கிட மலர் மருந்துகளான
ஸ்கிலெராந்தஸ், செஸ்நட்பட், மிமுலஸ், லார்ச், கிளெமேடிஸ் , எல்ம் , சிறப்பாக பயன்படுகின்றன.
அவரவர் குறைகளுக்கு ஏற்ப மருந்து தேர்வுசெய்து
பயன்படுத்தி நல்மதிப்பண் பெற்றிட வாழ்த்துக்கள்.